ஏட்டுத்திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

ஏட்டுத்திக்குகளிலிருந்து...

 17.5.2022

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

பீகாரில் விரைவில் மாநில அளவிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

எனது ஆட்சியில் தமிழ்நாட்டின் உயர்கல்வியின் பொற்காலமாக அமையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில், புலால் உணவு உண்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கை கூறுகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

கர்நாடகா குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முகாமில் இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து திரிசூல தலைகளை விநியோகித்ததாக பஜ்ரங் தள் அமைப்பினர் மீது குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

கரோனா தொற்றுநோய் தொடங்கியதைத் தொடர்ந்து மூத்த குடிமக்கள் பயணச் சலுகையை நிறுத்தியதன் மூலம் மார்ச் 2020 முதல் இரண்டு ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாயை ரயில்வே ஈட்டியுள்ளதாக தம்பட்டம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment