ஆசிரியருக்குக் கடிதம்! அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களும், வணக்கமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

ஆசிரியருக்குக் கடிதம்! அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களும், வணக்கமும்!

அன்புள்ள, மானமிகு தமிழர் தலைவர் அய்யா  அவர்களுக்கு, வணக்கம். மே மாதம் 22ஆம் தேதி ‘விடுதலை' செய்தி ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது.

 மே மாதம் 24ஆம் தேதி அன்று விவசாயத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். 19 நாள் முன்னதாகவே மேட்டூர் அணை திறக்கப்படுவதால் விவசாயிகள் என்னைப்போலவே மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். கூடியவரை 100 முதல் 120  நாள்கள் கொண்ட குறுவை நெல்லை, முன்னதாகவே அறுவடை செய்வதால் அதை மழைநீர் சேதமில்லாமல் நன்றாக உலரவைத்து பயன்படுத்த உதவியாக இருக்கும். இப்பொழுது திறக்கும் தண்ணீரால் ஆவணி மாதத்திலேயே  அறுவடையாகி தாளடி என்ற சம்பா பயிர் நடுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் புரட்டாசி அய்ப்பசி பெய்கின்ற மழைநீர் பயிர்களுக்கு மிகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாக அமையும்.

இந்த முன்யோசனையுடன் செயல்பட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றியையும், வாழ்த்துக் களையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

அன்புள்ள,

பேராசிரியர் சோம.வேலாயுதம், சிகாகோ

No comments:

Post a Comment