மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி

சென்னை, மே 10- நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக் கும் வகையில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து 4.80 லட் சம் டன் இறக்குமதி செய்யப்பட உள்ளது. வரும் 15-ஆம் தேதி முதல் தமிழ் நாட்டுக்குஇந்த நிலக்கரி வரும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2.29 கோடி வீட்டு மின் இணைப்புகள், 34 லட்சம் வர்த்தக இணைப்புகள், தொழிற்சாலைகளுக்கு 7.50 லட்சம் குறைந்த அழுத்த மின் இணைப் புகள், 10 ஆயிரம் உயர் அழுத்த மின் இணைப்பு கள் உள்ளன.

குளிர்காலத்தில் தின சரி மின் தேவை 9ஆயிரம் மெகாவாட், கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் என்ற அள வில் உள்ள நிலையில், தற்போது தினசரிமின் தேவை மிக அதிக அள வாக 17 ஆயிரம் மெகா வாட் என்ற புதிய உச் சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் 29ஆம் தேதி தினசரி மின் தேவை 17,370 மெகா வாட்டாக உயர்ந்தது.

மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின் வாரியம், தனது சொந்த உற்பத்திநிலையங்களில் இருந்து தினமும் 3,700 மெகாவாட் மின்சா ரத்தை உற்பத்தி செய்கி றது. எஞ்சிய மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்தும், தனியார் மின் நிலையங்களிலும் இருந்து கொள்முதல் செய்கிறது.

அனல் மின் நிலையங் களில் தினசரி மின் உற் பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகி றது. ஆனால், ஒடிசா மாநி லத்தில் உள்ள தால்சர், அய்.பி.வேலி ஆகிய 2 சுரங்கங்களில் இருந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி விநியோகம் செய்யப் படுகிறது.

சுரங்கங்களில் இருந்து சரக்கு ரயில் கள் மூலம் பாரதீப் துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் நிலக்கரி, அங்கிருந்து கப் பல்கள் மூலம் தமிழ்நாட் டுக்கு கொண்டு வரப்படு கிறது. எனினும், பாரதீப் துறை முகத்தில் தமிழ் நாட்டுக்கு நிலக்கரி ஏற்ற ஒரு தளம் மட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது, சரக்கு ரயில் பெட்டிகள் பற்றாக் குறை உள்ளிட்டவற்றால் நிலக்கரி கொண்டு வருவ தில் தாமதம் ஏற்பட்டுள் ளது. இதனால், அனல் மின் நிலையங்களில் நிலக் கரி பற்றாக்குறை ஏற் பட்டு, முழு அளவில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடு களிலிருந்து இறக்குமதி

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தமிழ் நாடு மின் வாரிய அதிகாரி கள் கூறியதாவது: நிலக் கரி தட்டுப்பாடு காரண மாக 2 மாதங்களுக்குத் தேவையான 5 லட்சம் டன் நிலக்கரி, வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற் பத்தி செய்ய முடியும்.

இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்கு மதி செய்யப்படும் என்று மின் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். தற் போது, இந்தோனேசியா மட்டு மின்றி, மலேசியா வில் இருந்தும் 4.80 லட் சம் டன் நிலக்கரி இறக் குமதி செய்யப்பட உள் ளது. இதற்கான ஒப்பந்தக் கோரலில் 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. இந்த நிலக்கரி வரும் 15ஆம் தேதி முதல் தமிழ்நாட் டுக்கு வரும். இதேபோல, நடுத்தரகால அடிப் படையில் 650 மெகாவாட் மின்சாரமும், குறுகிய கால அடிப்படையில் 750 மெகா வாட் மின்சாரமும் கொள்முதல் செய்ய ஒப் பந்தம் மேற் கொள்ளப் பட்டுள்ளது.

தற்போது காற்றாலை களில் இருந்து தினமும் 2,000 மெகாவாட்டும், பகலில் சூரியசக்தி மூலம் 3,200 மெகாவாட் மின் சாரமும் கிடைக்கிறது. இவற்றைக் கொண்டு இந்த மாத தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

ஜுன் மாதம் தொடங் கியதும் தென் தமிழ்நாட் டைச் சேர்ந்த மாவட்டங் களில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங் கும். அப்போது தினசரி மின் தேவை படிப்படியாக குறையும். இவ்வாறு அதி காரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment