மாநிலங்களவைத் தேர்தல் மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் இந்திய தேர்தல் ஆணையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

மாநிலங்களவைத் தேர்தல் மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் இந்திய தேர்தல் ஆணையம்

சென்னை, மே 17- தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர் தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு மாநிலத் துக்கும் அந்தந்த மாநில மக்கள்தொகை எண்ணிக் கையின் அடிப்படையி லேயே நாடாளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. இதன்படி தமிழ்நாட்டிற்கு மக்கள வையில் 39 பேருக்கும், மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்து வம் அளிக்கப்பட்டுள் ளது.

இந்நிலையில் மாநி லங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24ஆம் தேதி தொடங்கி, 31ஆம் தேதியுடன் முடி வடையும் என்றும் தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பி னர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதி முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப் புவதற்காக, இந்தியத் தேர் தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி தேர்தல் அறிவிக்கையை வெளி யிடும் நாள் மற்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள் 2022 மே 24ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2022 மே 31ஆம் தேதி. வேட்பு மனுக்க ளைப் பரிசீலனை செய் யும் நாள் 2022 ஜூன் 1 ஆம் தேதி. 

வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள் வதற்கான கடைசி நாள் 2022 ஜூன் 3ஆம் தேதி. வாக்குப் பதிவு நாள் 2022 ஜூன் 10 ஆம் தேதி. வாக்குப் பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஜூன் 10 ஆம் தேதி. தேர்தல் நட வடிக்கைகள் முடிவுறும் நாள் 2022 ஜூன் 13 ஆம் தேதி 

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டசபை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக வும், தமிழ்நாடு சட்டசபை செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர் தல் நடத்தும் அதிகாரியா கவும் நியமனம் செய்துள் ளது.

No comments:

Post a Comment