சென்னை, மே 16- தமிழ்நாட் டில் கரோனா தடுப்பூசி முதல் தவணையை 93.55 சதவீதம் பேரும், 2ஆ-ம் தவணையை 81.85 சத வீதம் பேரும் செலுத்தி உள்ளனர். 2 கோடி பேர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் இருக் கிறார்கள். எனவே ஜூன் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒரு லட் சம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடை பெற உள்ளது.
இதுபோன்று மாதந் தோறும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தடுப்பூசி போடாதவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு மருத்துவத்துறையும், மற்ற சேவை துறைகள், தன்னார்வ தொண்டு நிறு வனங்களுடன் இணைத்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழ்நாடு மக்கள் மற்றும் மருத்துவ நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment