வண்ணத்தில் மின்னும் மின் நூல் திரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

வண்ணத்தில் மின்னும் மின் நூல் திரை

மின் நூல் வாசிப்பான்களின் திரையாக இருப்பது, இ - பேப்பர் தொழில்நுட்பம் தான். அமேசானின் 'கிண்டில்' முதல், 'பாக்கெட் புக் இங்க் பேட்' வரை, பல இ - ரீடர் கருவிகளில், இ - பேப்பர் திரைகள் உள்ளன.

பொதுவாக, மின் நூல் திரைகள், காட்சிப்பதிவுகளைக் காண்பதற்கு ஏற்றவையல்ல. வண்ண எழுத்துக்கள் மற்றும் படங்களுடன் கூடிய நூல்களின் பக்கங்களை மட்டுமே, திரையில் காட்டும் திறன் படைத்தவை. ஆனால், 'இ - இங்க்' தயாரித்துள்ள 'கலைடோ பிளஸ்' என்ற புதிய தொழில்நுட்பம், அடர்த்தியான வண்ணத் திரை கொண்ட இ - பேப்பரை, அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது, ஏற்கெனவே இ - இங்க் உருவாக்கிய, 'கலைடோ 3' என்ற இ - பேப்பர் திரையை விட, 30 சதவீதம் அதிக வண்ண அடர்த்தியைக் கொண்டது.கண்ணுக்குக் கெடுதல் விளைவிக்கும் நீல ஒளியை, கலைடோ பிளஸ், 60 சதவீதம் குறைத்துவிடுகிறது. சிறிய திரை முதல், 13.3 சதுர அங்குலம் வரையுள்ள திரை வரை, கலைடோ பிளஸ் வடிவமைத்துள்ளது. 

சுற்றுப்புற வெளிச்சம் இல்லாத இரவில் படித்தாலும், கண்களுக்கு இதமாக இருக்கும்படி, இத்தொழில்நுட்பம் பார்த்துக்கொள்கிறது.ஏப்ரல் 27 முதல், தைவானில் நடக்கும் டாய்பேய் நாங்காங்க் கண்காட்சியில், கலைடோ பிளஸ் இ - பேப்பர் திரைகளை, இ - இங்க் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.


No comments:

Post a Comment