மரியுபோல் நகரம் சரணடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: உக்ரைன் திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

மரியுபோல் நகரம் சரணடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: உக்ரைன் திட்டவட்டம்

கீவ், மார்ச் 22- உக்ரைன் மீது ரஷ்யா 27ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கர மான ஆயுதங்களுடன் தாக்குவ தால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. பொதுமக்கள் இறந்த வண்ணம் உள்ளனர். அங்கிருந்து வெளியேற முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரணடைய வேண்டும். இல் லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்து உள்ளது.

ஆனால், சரணடைய மாட் டோம் என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக் தெரிவித்துள்ளார். தொடர் சண்டை யால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவ திப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆயுதங்களை கீழே போடு வது குறித்து எந்த பேச்சுவார்த் தையும் நடைபெறவில்லை. இது குறித்து ஏற்கெனவே, நாங்கள் ரஷ் யாவுக்கு தகவல் தெரிவித்துள் ளோம் என இரினா தெரிவித்து உள்ளார்.

உக்ரைனின் தென்கிழக்கு பகுதி யில் உள்ள அதிகமாக ரஷ்யன் மொழி பேசுபவர்களை கொண்ட மரியுபோல் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யா ஆர்வம் காட்டுகிறது. இந்த நகரை கைப்பற்றினால் ஏற் கெனவே கைப்பற்றி தங்களுடன் இணைத்துள்ள கிரிமியாவிற்கு ரஷ்யா படைகள் சென்று வர முக்கிய வழித்தடமாக மாறிவிடும்.

மரியுபோல் நகரில் 4 லட்சம் மக்கள் போதுமான குடிநீர், உணவு இல்லலாமல் தவித்து வருகிறார்கள். கருங்கடலுக்கான ரஷ்யாவின் மூத்த கடற்படை கமாண்டர் போரில் இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உடனடி பேச்சுவார்த்தை மட்டுமே ரஷ்யா இழப்புகளை குறைக்க ஒரே வழி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது.

No comments:

Post a Comment