நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான சான்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான சான்று

தஞ்சாவூர், மார்ச் 22- புகழ் பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவி சார் குறியீடுக்கான அங்கீ கார சான்று கிடைத்துள் ளதாக சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்குரை ஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய் யும் அறிவுசார் சொத்து ரிமை கழக வழக்குரைஞரு மான ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: "தென்னிந் தியாவின் கலாச்சார தலைநகரமாகவும், சங் கீதங்களின் கோட்டை யாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் நூற்றாண்டு முதல், நாதஸ் வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வரு கிறது. 1955ஆம் ஆண்டுக்கு முன்பு "பிரதி மத்தியமம் ஸ்வரம்" கொண்டு தான் நாதஸ் வரத்தில் தாய் ராகங்கள் வாசிக்கப் பட்டன. பின்னர், 1955ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட் டம் நரசிங்கம்பேட்டை கிரா மத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவி னைக் கலைஞர் என்பவ ரால், நாதஸ்வரத்தில் "சுத்த மத்தியமம் ஸ்வர"த் தை கண்டுபிடித்து அதை நாதஸ்வர கருவியில் உரு வாக்கினர். இந்த இசைக் கருவி எளிதாக இசைக்க முடிந்தது. இதனால் தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என பெயர் வந்தது. நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு இந்த கருவி பெரிதும் உதவியது. தற் போது இந்த நாதஸ்வரம் கருவி 158 நாடுகளில் அங் கீகாரம் பெறப்பட்டுள் ளது. இந்த இசைக் கருவி யை கொண்டு வாசித்த ராஜ ரத்தினம் பிள்ளை, காருக் குறிச்சி அருணாச் சலம் உள்பட புகழ்பெற்ற நாதஸ்வர வித் வான்களும் நரசிங்கம் பேட்டை நாதஸ்வரத்தை வாசித்து பெரும் புகழ் பெற்றனர். எனவே இந்த நாதஸ் வரத்தை திராவி டர்களின் இசைக்கருவி என அழைக் கப்படுகிறது. நரசிங்கம் பேட்டையில் ஆச்சா மரங்களை கொண்டு நாதஸ்வரத்தை சுமார் 15 குடும்பத்தினர் தற்போது வடிவமைத்து வருகின்ற னர். இந்த நாதஸ்வரம் இரண்டரை அடி நீளத் தில் வெட்டி அதனை கடைந்து, உள்து வாரம் இட்டு, 12 துளை களை மிகவும் கவனமாக யிட்டு உருவாக்கப்படுகி றது. பல்வேறு சிறப்புகள் கொண்ட நரசிங்கம் பேட் டை நாதஸ்வரத் துக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஜன.31 புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக் கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட் டுறவு சங்கத்துக்காக விண் ணப் பிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு ஆவ ணங்களை சான்றாக வழங்கி, தொடர்ந்து 8 ஆண்டுகள் போராட்டத் துக்கு பின் னர் தற்போது புவிசார் குறியீடுக்கான சான்றிதழ் கிடைக்கப்பட் டுள்ளது. இதையடுத்து தமிழ கத்தில் இதுவரை 46 பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நரசிங்கம் பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து 10 பொருட்களுக்கு வழங் கப்பட்டுள்ளது. நரசிங் கம் பேட்டை நாதஸ்வரம் என்ற பெயரில் இந்த கிரா மத்தை தவிர, வேறு எங்கும் வடிவமைத்து விற் பனை செய்தால் அந்த செயல் சட்டப்படி குற்றமாகும்" என்றார். 


No comments:

Post a Comment