மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 103 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா 10.3.2022 அன்று மாலை 7 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவுக்கு மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை கழக செயலாளர் இ. அந்தோணி கடவுள்மறுப்புக்கூறி அனைவரையும் வரவேற்றார். மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன் அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்தார். அன்னையார் அவர்களின் அரும்பணியை நினைவுகூர்ந்து தோழர்கள் உரையாற்றினர். நிகழ்வில் தோழர்கள் எஸ்.அசோக்குமார், அமுதன், எம்.சந்திரசேகர், அ.இளங்கோவன், அ.புனிதன், பீட்டர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கழகத் தோழர் பெரியார் பாலாஜி நன்றி கூறினார்.
Tuesday, March 15, 2022
மும்பையில் அன்னை மணியம்மையார் 103ஆவது பிறந்த நாள் விழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment