அகில இந்திய ஆட்சிப்பணியின் விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

அகில இந்திய ஆட்சிப்பணியின் விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது

பிரதமருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன. 24 ``அகில இந்திய ஆட்சிப் பணியின் விதி களை திருத்துவதால் ஆட்சிப் பணி அலுவலர்கள் நிரந்தர அச்ச உணர்வுடன் பணி யாற்றும் சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்றும், மாநில நிர்வாகமும் தேசிய நலனும் பாதிக்கப் படும்’’ என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தி.மு.. தலைவரும், முதலமைச்சருமான மு..ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:

சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 இல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும், மேலும் ஆட்சிப் பணி அதிகாரி களின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கெனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஒன்றிய குரூப்-1 நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர் களை தேர்வு செய்யும் முறை மூலமாகவும் ஒன்றிய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில் மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர் களைச் சார்ந்துள்ளது.

அதிகாரிகளை மாற்றுவது தொய்வு நிலையை உண்டாக்கும்!

மக்களுக்குத் தேவையான பல்வேறு ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல் படுத்தி வருவதையும், தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்கு தேவைப்படுகிறார்கள்.

இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கெனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வுநிலையை ஏற்படுத்திவிடும். மேலும், ஒன்றிய அரசு வெளிச்சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறை ஒன்றிய அரசு பணிக்குச் செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கெனவே குறைத் துள்ளது.

இந்திய ஆட்சிப் பணியை சேதமடையச் செய்துவிடும்!

இந்த புதிய சட்டத் திருத்தமானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சிப் பணி என்பதனை சேதமடையச் செய்துவிடும் என்பதையும் இந்திய ஆட்சிப்பணி இதுவரை தேசத்திற்குச் சிறப்பான சேவையாற்றி ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளின்மூலம் ஒரு வலுவான கட்டமைப்பாக திகழ்கிறது.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப் பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்ற முடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர் வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர் களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்கும்.

இதனை செயல்படுத்தினால் அகில இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றும், இது தற்போது வளர்ச் சிப் பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல.

குடிமைப்பணி அலுவலர்கள் அரசியல் சார் புத்தன்மை இன்றியும், எவ்வித அச்ச உணர்வின்றியும் பணியாற்ற வேண் டும். ஆனால் உத்தேசிக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையையும் அதன் பணியாற்றும் செயல் திறனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களில் குடிமைப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பதும் சிக்கலாக்கிவிடும். இவற்றினால் மாநில நிர்வாகமும் அதன் மூலம் தேச நலனும் கூட பாதிக்கப்படக் கூடும்.

எதையும் அழிப்பது எளிது மறுகட்டமைப்பு செய்வதுதான் கடினம்!

புதிய சட்ட திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக சட்ட திருத் தங்களை ஒன்றிய அரசு கொண்டு வர முயற் சிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும்.

இந்தத் திருத்தத்திற்கு தொடர்புடைய இரண்டு அமைப்பு களான மாநில அரசுகளும், நிர்வாக கட்டமைப்பும் இதனை வரவேற்கவில்லை. ஏற்கெனவே நடைமுறையிலுள்ள ஒரு ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வதும் கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல.

இது கடந்த 75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்கச் செய்யும். எதனையும் அழிப்பது எளிது ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினமானது.

இவ்வாறான கட்டுப்படுத்தக்கூடிய புதிய விதிமுறைகளை வகுப்பதற்குப் பதிலாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை எடுத்துக் கொண்டு ஒன்றிய அரசு நேர்மறையான நடவடிக்கை களை எடுப்பதன்மூலம் அகில இந்திய ஆட்சிப் பணி யாளர்களின் பணி அமைப்பினை மேம்படுத்தவும் அவர்கள் பணியாற்றுவதற்கு சாதகமான சூழலையும் உருவாக்குவதன் மூலம் ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அவர்கள் தாங்களாகவே எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் சென்று பணியாற்றக் கூடிய நிலையினை உருவாக்கலாம்.

நம்மால் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்!

தாங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன். மேலும் சுதந்திரமான சிந்தனை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் சேவையாற்றும் ஒரு எஃகு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க விரும்பிய சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை நாம் நினைவு கூரவேண்டும்.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடுமாறும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித் துள்ள உயரிய சிந்தனையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப் படையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநில அரசு களோடு கலந்தா லோசனை செய்து நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment