செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

செய்திச் சுருக்கம்

பரவல் உச்சம்

கரோனா தொற்று பரவலிவன் 3ஆவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கல்வி (அய்.அய்.டி.) நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனடி இணைப்பு

தட்கல் திட்டத்தின்கீழ் உரிய தொகை செலுத்தி 15 எச்.பி. வரை உடனடியாக விவசாய மின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என மின்சாரம் வாரியம்

அறிவித்துள்ளது.

போட்டி

தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என ஆணையத்தின் தலைவர்

சா. பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட் பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளன.

சிகிச்சை

சென்னையில் 4 மண்டலங்களில் கரோனா வால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருது

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது.

இதுவரை

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதுவரை 875 நாடாளுமன்ற பணி யாளர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

வறுமையில்

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார செயல் பாடுகளால் நாட்டு மக்களில் 4 கோடி பேர்  வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment