தேசிய நெடுஞ்சாலைக்கு தேவையான நிலத்தை உடனே கையகப்படுத்தி தர வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

தேசிய நெடுஞ்சாலைக்கு தேவையான நிலத்தை உடனே கையகப்படுத்தி தர வேண்டும்

அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை, ஜன.24 சாலை அமைக்கும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை துறை கேட்கும் நிலத்தை உடனே கையகப் படுத்தி தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் .. வேலு உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் செயல்படுத் தப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சம்பந்தப் பட்ட சாலை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ..வேலு தலை மையில்  நடந்தது. இக்கூட்டத் தில் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், தலைமை பொறி யாளர்கள் சந்திரசேகரன், பால முருகன், கோதண்டராமன் உள்ளிட்ட  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழ் நாடு அரசு சார்பில் மாநில தேசிய நெடுஞ்சாலை அலகு மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நடந்து வரும் திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக் கப்பட்டன. அப்போது, தமிழ் நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில், தேசிய
நெடுஞ்சாலை
ஆணையத்தால் மேற் கொள்ளப்படும் நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு நிலம் கையகப் படுத்தும் பணிகளை வேகப் படுத்த வேண்டும். மேலும், ஆணை யத்துக்கான அனைத்து அனுமதிகளையும் விரைந்து பெற்று தர தேவையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் மூலம் நடக்கும் பணி களுக்கு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment