இந்தியக் குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ் நாட்டுக்கான அணிவகுப்பு ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., பாரதியார் படங்கள் இடம்பெற்று இருப்பதை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இவர்கள் எல்லாம் அனாமதேயங்களாம் - மக்களால் அறியப்படாதவர்களாம்!
தமிழ்நாடு அரசு என்ன செய்தது? வெறும் அறிக்கையுடன் நின்றுவிட்டதா?
இல்லை, இல்லை.
அதற்குப் பதிலாக ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் அடங்கிய ஊர்தியை தமிழ்நாட்டில் நடக்கும் குடியரசு நாள் ஊர்வல அணிவகுப்பில் இடம்பெறச் செய்தது - சரியான பதிலடி!
மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்ற தி.மு.க.வின் முழக்கத்திற்கான முத்திரைப் பதிலடி!
பாராட்டுகிறோம்! பாராட்டுகிறோம்!
No comments:
Post a Comment