விருத்தாசலம் பகுதியில் விடுதலை சந்தா சேர்க்கை 2.1.2022 அன்று நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர் இளங்கோவன், மாநில இளைஞரணி செயலாளர் சீ.இளந்திரையன், மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் ராமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய செயலாளர் குமரேசன், சின்னவட வாடி அறிவழகன், விருத்தாசலம் நகர செயலாளர் சேகர் ஆகியோர் சந்தாக்களை வழங்கினர்.
கடலூர் மாவட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் சந்தாக்களை வழங்கினர். மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட அமைப்பாளர் மணிவேல், வடக்குத்து இந்திரா நகர் கிளை தலைவர் பாஸ்கர், கிளைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் சந்தா சேர்ப்புப் பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment