‘‘சொற்கள் செய்து தருபவள்'' நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

‘‘சொற்கள் செய்து தருபவள்'' நூல் வெளியீட்டு விழா

செங்கல்பட்டு, ஜன. 21- திராவிடர் கழக தோழர் கு.இராஜா அவர்களால் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய பார்வையில் பெண்ணிய சிந்தனையுடன் சபரிமலை  அய்யப்பன் கோயில் பெண் களுக்கு தடை, மனுதர்மத் தில் பெண்களின் இழி நிலை, தற்கால பெண்க ளின் நிலை ஆகியவற்றை தன் தாயின் கேள்வி எனும் சொற்களே இந்நூலுக்கு அடிப்படையாக அமைந்ததால் இந்நூலுக்கு 'சொற்கள் செய்து தருப வள்" என் நூலாக்கியுள் ளார் இந்நூல் வெளி யீட்டு விழா செங்கல்பட்டு ஏழுமலை மண்டபத்தில் 2.1.2022 ஞாயிறு மாலை 4 மணியளவில் நடை பெற்றது.

புத்த ஒளி பன்னாட்டு பேரவை நா.வேணி முன் னிலையில் விசிக மாநில கொ..செ.இரா.ஆதி மொழி தலைமையில் பொதுப் பள்ளிக்கான மாநில பொதுச்செயலா ளர் பு.பா.பிரின்ஸ் கஜேந் திபாபு சொற்கள் செய்து தருபவள் நூல் வெளியிட முதல் நூலினை மதிமுக துணை பொதுச்செயலா ளர் அண்ணன் மல்லை சத்யா, அடுத்து திராவிடர் கழக மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம், பகுத் தறிவு எழுத்தாளர் மனற ஓவியக்கவி நா.வீரமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

காஞ்சி மக்கள் மன்ற தோழர் மகேஷ், வழக்கு ரைஞர் அசோக் கோவிந்த ராஜ், தோழர் பரஞ்சோதி, .பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், நூலாசிரியர் கருத்தாளர் கு.ராஜா ஏற்புரை ஆற்றி னார்.  செங்கை நகர கழக செயலாளர் கவிஞர் யாழன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் நூலாசிரியரின் அம்மா திருமதி ரமணி அம்மாள் மற்றும் குடும்பத்தினர், கழக நண்பர்கள்,  விசிக, மதிமுக பொறுப்பாளர் களும் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித் தனர்.

No comments:

Post a Comment