முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முதலமைச்சரின் செயல்பாடுகளை விமர் சித்தது, டெண்டர் முறைகேடு, வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கருத்து தெரிவித்ததாக அப்போதைய எதிர்க் கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 18 குற்றவியல் அவதூறு வழக்குகள் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்டன. செய்தி வெளியிட்ட முரசொலி ஆசிரியர் செல் வம், கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடரபட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித் திருந்தது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், முந்தைய அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப் பட்ட அனைத்து அவதூறு வழக்கு களையும் திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்துள்ளது.
அதேபோல திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தொடரப் பட்டுள்ள 18 அவதூறு வழக்குகளையும் திரும்ப பெற தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தார். இந்த வழக்கு கடந்தமுறை விசார ணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 18 குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்ட வணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று, மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, அவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment