தலைவரை தந்திட்ட கடலூர் மாவட்டத்தில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா -அறப்பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

தலைவரை தந்திட்ட கடலூர் மாவட்டத்தில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா -அறப்பணிகள்

வடலூர், டிச.3  வடலூர் திராவிடர் கழகம் சார்பில் 1.12.2021 அன்று தமிழர் தலைவர் கி வீரமணி பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நகர கழக செயலாளர் குண சேகரன் தலை மையில் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில் வட லூரில் நடைபெற்றது.

கழக துணைத்தலைவர் முத்தை யன் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் கி. வீரமணியின் தொண்டில் விஞ்சி நிற்பது சமூக நீதி பணிகளா? சனாதன ஒழிப்பா? எனும் தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தினார்.

சமூகநீதி பணிகளே எனும் அணியில் கவிஞர் தமிழேந்தி மண்டல செயலாளர் நா.தாமோ தரன், சனாதன ஒழிப்பு எனும் அணியில் கழகப் பேச்சாளர் யாழ் திலீபன் புலவர் ராவணன் ஆகியோர் வாதிட்டனர். சமூகநீதி பணிகளே விஞ்சியது என்று நடுவர் தீர்ப் பளித்தார்.

 இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் மாவட்ட இளைஞரணி செயலாளர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சத்யா குணசுந்தரி மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராமநாதன் ஒன்றிய கழக தலைவர் கனகராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் இந்திரஜித், வட்ட மாணவர் கழக தலைவர் ரேவந்த் ஆண்டனி,  துணைத் தலைவர் பார்த்திபன், மரு வாய் சேகர், திருநாவுக்கரசு, கலைச் செல்வி, கொளஞ்சி ஆகியோர் பங்கேற்றனர் முடிவில் நகர அமைப் பாளர் முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment