வடக்குத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

வடக்குத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 89ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வடக்குத்தில் 2.12.2021அன்று காலை 11 மணியளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக தலைவர் சொ. தண்டபாணி தலைமையில் மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில் நடந்தது. ஒன்றியத் தலைவர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பொருள்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

தி.மு..வை சேர்ந்த தமிழரசன், அந்தோணிசாமி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை, குப்புசாமி நகர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமதாஸ், உமாபதி, கோபால், வாஜித், கமலநாதன், மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, பெரியார் நூலக பொறுப்பாளர் கண்ணன், கழக மகளிர் அணியைச் சேர்ந்த விஜயா, வடலூர் கழக அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ரேவந்த் ஆண்டனி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment