அய்.அய்.டி. என்றால் அய்யர்- அய்யங்கார் டெக்னாலஜியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

அய்.அய்.டி. என்றால் அய்யர்- அய்யங்கார் டெக்னாலஜியே!

 மின்சாரம்

கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா அய்.அய்.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார்.  விடுதி அறையில் திடீரென அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தக் கொடூர நிகழ்வு மற்ற மாணவ-மாணவிகள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாத்திமா தற்கொலை செய்து கொள்வ தற்கு முன்பு கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த குறுஞ்செய்தி சமூக வலை தளங்களில் பரவியது.  அதில், தனது மரணத்துக்கு அய்.அய்.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டு இருந்தது. அது தவிர மேலும் 2 பேராசிரியர்களும் பாத்திமாவின் தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ள தாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.   பாத்திமா தற்கொலை தொடர்பான விசாரணையை நேர்மையாக நடத்தவேண்டும் என்று அய்.அய்.டி. வளாகத்திலும் போராட்டங் கள் நடைபெற்றன. சில கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் பாத்திமா தற் கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சென்னை அய்.அய்.டி.யில் நடக்கும் ஜாதிய தீண்டாமை, சிறுபான்மை பிரி வினர்  மீதான நெருக்குதல் காரணமாக. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சென்னை அய்.அய்.டி.,யில் 14 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். (இறந்தவர்களின் முகவரிகளைத் தேடி கருமாதிக்கும், திவசத்திற்கும் அய்யன் மார்கள் ஏற்பாடு செய்திருப்பார்கள்)

இடை நிற்றல்

2019 ஆம் ஆண்டு மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், மாநிலங்களவையில் அய்.அய்.டி-யில் மாணவர்கள் இடை நிற்றல் தொடர்பான ஒரு புள்ளி விவரத் தைச் சமர்ப்பித்தது.

கடந்த 2018-2019 கல்வி ஆண்டில் மட்டும் நாடு முழுவதுமுள்ள 23 அய்.அய்.டி கல்வி நிறுவனங்களில், 2,461 மாண வர்கள் படிப்பைப் பாதியில் விட்டுச்சென்று விட்டனர். டில்லி அய்.அய்.டி-யில் மட்டும் 782 மாணவர்கள், காரக்பூர் அய்.அய்.டி-யில் 622 மாணவர்கள், மும்பை அய்.அய்.டி-யில் 263 மாணவர்கள், கான்பூர் அய்.அய்.டி-யில் 190 மாணவர்கள், சென்னை அய்.அய்.டியில் 128 மாண வர்கள் படிப்பை முடிக்காமல் பாதியி லேயே இடை நின்றதாக அந்த அறிக்கை சொன்னது. (அந்த இடங்களும் பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கட்டப்படும்).

நவீன சேரன்மாதேவி

2017ஆம் ஆண்டு சென்னை அய். அய்.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதால், இரு தரப்பு மாணவர் களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சூரஜ் என்ற மாணவர் படுகாயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அய்.அய்.டி.யில் சைவ உணவு சாப்பிடுபவர்களின் எதிர்ப்பின் காரணமாக அசைவ உணவு சாப்பிடுபவர் களுக்கு தனி உணவறை, தனித் தட்டு மற்றும் கை கழுவும் இடம் கூட அமைக்கப் பட்டது, இந்த கைகழுவும் இடத்தில் இங்கு அசைவம் சாப்பிடுபவர்கள் வந்து கை கழுவக்கூடாது என்றும் அசைவம் சாப்பிடுபவர்கள் கை கழுவும் இடம் என்றும் எழுதப்பட்ட படம் இணைய தளத்தில் வெளியானதால் இதற்குக் கடு மையான எதிர்ப்பு எழுந்தது (இவ்வள வுக்கும் நாட்டில் மாமிச உணவு உட்கொள் வோர்தான் பெரும்பாலோர்!).

அய்.அய்.டியின் உணவு விடுதி கண் காணிப்புக் குழுவின் அறிவுறுத்தலின் படியே இந்த முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாணவர்கள் தெரிவித்திருக் கின்றனர். நாடு போற்றும் கல்வி நிறுவ னத்தில் நவீன தீண்டாமை நடைமுறைப் படுத்தப்படுவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். (மீண்டும் ஒரு சேரன் மாதேவி போராட்டம் தேவைப்படுமோ!)

பேராசிரியர் விபின் - 2021

உதவிப் பேராசிரியரான விபின் புதியதாக இணைந்திருக்கிறார். சென்னை அய்.அய்.டி. நிர்வாகம், ஜாதி ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதால் தம்மால் இங்கு பணிபுரியவே இயலாத நிலை உருவாகிவிட்டது; ஆகையால் தாம் பணியில் இருந்து வெளி யேறுகிறேன் என்று -மெயில் மூலம் சென்னை அய்.அய்.டி. நிர்வாகத்துக்கு பேராசிரியர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வசந்தா கந்தசாமி - 2015

இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வித மாகவே அய்அய்டி சென்னையின் அண் மைக்கால செயல்பாடுகள் இருந்து வரு கின்றன. முன்னதாக சென்னை அய்.அய். டி.யின் முன்னாள் பேராசிரியை முனைவர் வசந்தா கந்தசாமி, ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில்தான் அய்அய்டி-யில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக வும், தன்னைவிடவும் உயர்ந்த ஜாதியினர் பணிக்கான போட்டியிலிருந்ததால், தனக்கு வாய்ப்பு வழங்காமல் உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ஜாதியின் அடிப்படையில் அய்.அய்.டி. நிர்வாகம் பணி வழங்கியதாக குற்றம்சாட்டி, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீண்ட சட்டப்போராட்டத்தை நடத்திய வீராங் கனை அவர்.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத் தினர் அய்.அய்.டி.யின் பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தினர் - இந்து மதத்தின் மீதும் மோடி அரசின் மீதும் பல்வேறு அவதூறு துண்டறிக்கைகள் அச்சிட்டுக் கல்லூரி வளாகத்திலேயே வழங்குகின்றனர்.

நிலம் கையகப்படுத்தல் சட்டமுன் வரைவு, காப்பீட்டுச் சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரானச் சட்டம் போன் றவற்றைக் கொண்டுவந்து, பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி போல மோடி செயல்படு கிறார். இந்துமதவாதிகளின் செல்வாக்கால் சமற்கிருதம் திணிக்கப் படுகிறது. மதமாற்றம் ஊக்குவிக்கப்படு கிறது. பசுவதைத் தடைச்சட்டம் பாய்கிறது என்றெல்லாம் துண்டறிக்கை வெளி யிட்டுப் பரப்புகிறார்கள்.

மேலும் கல்வி பயிலும் இரண்டு ஜாதிப் பிரிவு மாணவர்களிடையே மோதலை உருவாக்கும் தன்மையில்  தூண்டப்படு கின்றன என்பன போன்ற குற்றச்சாட்டு களைக் கூறி 50 காசு போஸ்ட் கார்டில் யாரோ ஒருவர் எழுதியதன் அடிப்படை யில் ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறை சென்னை அய்.அய்.டி.நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்கு மாறு ஆணையிட - அந்தத் தருணத்தி லேயே அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப் பட்டது.

பார்ப்பனர்களின் சாம்ராஜ்யம்

சென்னை அய்.அய்.டி. பேராசிரியர் களில் பார்ப்பனர்கள் 98.59 சதவிகிதம்; தாழ்த்தப்பட்டோர் 1.41 சதவிகிதம்; பிற் படுத்தப்பட்டோர் பூஜ்யம். இணைப் பேராசிரியர்களில் பார்ப்பனர்கள் 96.7 சதவிகிதம்; தாழ்த்தப்பட்டோர் 3.3 சத விகிதம்; பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யமே! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மகேந்திர பிரசாத் சிங் என்பவர் பெற்ற தகவல்தான் இது.

2018ஆம் ஆண்டும் சென்னை அய்.அய்.டியில் நடந்த ஒன்றிய அரசின் விழாவில் இதேபோல் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவ காரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒன் றிய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற அந்தக் கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக, அப்போது விளக்கமளித்த அய்.அய்.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மாண வர்கள் தாமாக முன்வந்து சம்ஸ்கிருதப் பாடலை பாடியதாகக் கூறியிருந்தார்.

இப்பொழுது (20-11-2021) பட்டமளிப்பு விழாவிலும் - தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழின் - தமிழரின் பகைவர் என்ப தற்கு இன்னும் இன்னும் ஆதாரங்களைத் தேடிக் கொண்டு இருக்கப் போகிறார்களா நமது திராவிடத் தமிழர்கள்?

No comments:

Post a Comment