ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்ட திராவிடர் கழக செயலாளராக - இயக்கம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் (இராவண லீலா வழக்கு உள்பட) களம் கண்ட தீரராக - பிள்ளைகளின் திருமணங்களை எல்லாம் அப்பழுக்கற்ற முறையில் கொள்கை மணக்கும் விழாவாக நடத்தி - தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் அன்புக்குரிய தொண்டராக, நம்மிடத்திலும் பற்றும் பாசமும் கொண்ட கருஞ்சட்டை வீரராக - திருப்பத்தூர் நகரில் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையிலும் பிரபலமான மாமனிதராக வலம் வந்த வாழ்நாள் எல்லாம் கொள்கை வழி வாழ்ந்து காட்டிய சுயமரியாதைச் சுடரொளி திருப்பத்தூர் மானமிகு ஏ.டி.கோபால் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் அவரை மாறா அன்புடனும், மதிப்புடனும் நினைவு கூர்வோம். அவர்தம் அளப்பரிய கழகத் தொண்டினைப் போற்றி வீரவணக்கம் செலுத்துகிறோம்!
சென்னை
20-11-2021
No comments:
Post a Comment