திருப்பனந்தாள் வட்டம் சோழபுரம் அருகேயுள்ள குருகூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஆர். நாகராசன் (வயது 96) அவர்கள் இன்று (16.11.2021) காலை மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
இளைய வயதிலேயே இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட கழகம் நடத்திய அத்தனைப் போராட்டங்களிலும் தம்மை இணைத்துக் கொண்டவர்.
60 ஆண்டுகளுக்கு முன்பே தம் இல்ல நிகழ்ச் சிகளில் சமபந்தி உணவு முறையைச் செயல்படுத்திக் காட்டியவர்.
படிப்பு வாசனையறியா அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் படிப்பதற்குப் பெரும் உதவி செய்த செயல் வீரர்.
சோழபுரம் பெரியார் படிப்பகம் உருவாக ஊன்று சக்தியாக இருந்தவர்.
96 ஆண்டு காலம் வாழ்ந்து அந்த வட்டாரத்தில் மதிப்பிற்குரிய பெரு மகனாராகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு இயக்கத்திற்கான நட்டமாகும். அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத் தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
16-11-2021
தொடர்புக்கு:
மகன் நா. இமயவரம்பன் 9787291412
குறிப்பு: மறைவுற்ற ஆர். நாகராசன் மகன்
நா. இமயவரம்பனிடம் தமிழர் தலைவர் தொலைப் பேசி மூலம் தொடர் கொண்டு ஆறுதலையும், இரங் கலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment