பணி நிறைவு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் திரு. நல்லம நாயுடு (வயது 83) நேற்று (15.11.2021) இரவு மறைந்த செய்தி யறிந்து வருந்துகிறோம். தேனி மாவட்டம் குப்பி நாயக்கன்பட்டி கிராமத்தில் பின்தங்கிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, படித்து, காவல்துறையில் பணிக்குச் சேர்ந்த அவர் தனது கடுமையான உழைப்பால் நேர்மையாகப் பணியாற்றி உயரதிகாரியாகி பணிநிறைவு பெற்றவர்.
நேற்றைக்கு தான் ‘விடுதலை’ ஏட்டில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதில் நடை பெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாம் விடுத்த வேண்டுகோள் அறிக்கையில் அத்தகைய விசாரணையில் 'முன்பு துப்பு துலக்கிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான திரு. நல்லம நாயுடு போன்றவர்களையும் கூட தனியே Director of Prosecutions என்ற பதவியை ஏற்படுத்தி, குற்றப் பத்திரிக்கைகளில் சட்ட ஓட்டையின்றி, தனியே விசாரணை அமைப்பை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வழக்குகள் முடியும் வகையில்' அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தோம்.
அன்றைய இரவே காவல்துறை அதிகாரி
திரு. நல்லம நாயுடு மறைந்தது நாங்கள் சற்றும் எதிர்பாராதது.நேர்மையாக காவல்பணி புரிந்திட மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி, இறுதிவரை அதே உணர்வுடன் வாழ்ந்து மறைந்த திரு. நல்லம நாயுடு அவர்களுக்கு நமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது வாழ்விணையர், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
16-11-2021
No comments:
Post a Comment