உரத்தநாடு திராவிடர் கழக மேனாள் தலைவரும், தன் உணவு விடுதியைக் கழகப் பிரச்சாரப் பாசறையாக நடத்தி வந்தவரும், கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்ட போராளியும், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை அன்றாடம் எழுதி மக்கள் பார்வைக்கு வைத்த ஓவியருமான முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு ஆர்.பி. சாமி (வயது 94) அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் அரும்பெரும் கழகப் பணிகளை நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்துகிறோம். அவரது மகனும் திருவோணம் ஒன்றிய கழகத் தலைவருமான சாமி. அரசிளங்கோ மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடர் கழகம்
சென்னை
29-11-2021
குறிப்பு: ஆர்.பி. சாமி அவர்களின் மகன் அரசிளங் கோவிடம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment