புதுடில்லி,நவ.29- நாட்டில் நேற்று (28.11.2021) ஒரே நாளில் 8,774 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸ் பாதிப்புக்கு 621 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8,774 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது, கடந்த 51 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 9,481பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குண மடைந்து வீடு திரும்பினர். குணமடைவோர் விகிதம் 98.34 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 1,05,691 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறை வடைந்த 24 மணிநேரத்தில் 621பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந் துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கரோனா தொற் றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,68,554 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், கரோனா தினசரி பாதிப்பு விகிதம்0.80 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.85 சதவீத மாகவும் உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment