சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்: ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்: ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, அக்.14 தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு தமிழ்நாடுஅரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13.9.2021 அன்று நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வகை செய்யும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டது.

அந்த நேரத்தில்தான், தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து பன்வாரிலால் புரோகித் விடைபெற்று, புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இதற்கிடையே 12 மாநில முதலமைச்சர்களுக்கு நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் நான் எதிர்நோக்குகிறேன் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஆளுநருக்கு மசோ தாவை அனுப்பி ஒரு மாதம் ஆன போதும், இன்னும் பதில் வராத நிலையில், நேற்று (13.10.2021) திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, முதலமைச்சர் மு..ஸ்டாலினுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு, முதலமைச்சரின் தனிச் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் இருந்தனர்.

20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு..ஸ்டா லின் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment