Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
‘‘ஊசிமிளகாய்'' - பலமுறை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்ட ‘வீர்' சவர்க்காரைக் காப்பாற்ற புதிய புளுகா?
October 14, 2021 • Viduthalai

பிரிட்டிஷ் அரசில் ஆயுள் தண்டனை பெற்று அந்தமானுக்கு அனுப்பப்பட்ட (அக்காலத்தில்  ‘தீவாந்தர தண்டனை' என்று பெயர்) ‘இந்துத்துவா' பெயர் கண்டுபிடிப்பாளரான வி.டி.சவர்க்கார் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் 2, 3 தடவைக்குமேல் மன்னிப்புக் கடிதம் எழுதியதுபற்றி பல விமர்சனங்கள் வந்துள்ளன.

இப்பொழுது பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் சவர்க்காரைப் பாதுகாக்க வேடிக்கையான ஒரு புதிய காரணத்தைக் கூறியுள்ளதுதான் நாட்டின் இன்றைய  நம்பர் ஒன் நகைச்சுவை!

காந்தியின் யோசனையைக் கேட்டுத்தான் இந்த மன்னிப்புக் கடிதத்தை எழுதியதாக ஒரு ‘புதுக்கதை'  எழுதி வினோத விளக்கம் தந்துள்ளார்!

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டு நாள்கள்தான்; ஆனால், இந்த சங் பரிவாரங்களின் புதிய கோயபெல்ஸ் ஆயுதம் 8 மணிநேரத்திற்குக்கூட நிற்கவில்லை என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்!

எதிர்க்கட்சியினர் பலரும் இந்த பொய்மையின் தோலை உரித்துத் தொங்கவிட்டுள்ளனர்!

சவர்க்காரின் மன்னிப்புக் கோரிக்கை கடிதங்கள்:

1911 இல் - சிறை வாசத்தில் 6 மாதம் ஆனவுடனேயே மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார்; அப்போது காந்தி அவர்கள் இந்தியாவிலேயே இல்லை; தென்னாப்பிரிக்காவில்தான் இருந்துள்ளார்!

1920 இல் கூட காந்தி, ‘‘உங்களுக்கு நான் எப்படி அறிவுரை கூற முடியும்'' என்றுதான் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார்!

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சி எம்.பி., ஜெயராம் ரமேஷ், அசுதீன் ஓவைசி எம்.பி., இப்படிப் பலரும் - ‘‘ஆர்.எஸ்.எஸ்.சினர்  புளுகு பேக்டரியையே நடத்துகிறார்கள்'' என்று கூறி, பொய்த் திரையை, ஆதாரப்பூர்வ முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி கிழிகிழி என்று கிழித்துவிட்டனர்.

வாதத்திற்காக அப்படியே காந்தியார் மன்னிப்புக் கேட்கக் கூறியதாகவே இருக்கட்டும்; ‘வீர', ‘தீர' சவர்க்கார் என்ற ‘‘லட்சிய மாவீரர்'' அதனை ஏற்றிருக்கலாமா?

என்னவானாலும் ‘முடியாது' என்றல்லவா காந்திக்கே பதில் எழுதியிருக்கவேண்டும்?

எத்தனை முறை பலர் வேண்டினாலும், தனது உறுதியில் இறுதிவரை நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட 23 வயது இளைஞன் மாவீரன் பகத்சிங் வரலாறு இடம்பெற்றுள்ள பாடப் புத்தகங்களில், ‘‘மன்னிப்புத் திலகம்'' சவர்க்கார் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.

என்றாலும், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்காமல் - இப்படி  ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டம் கட்டி வரலாற்றைக் கொச்சைப்படுத்துவது  நியாயமா?

‘‘வாய்மையே வெல்லும் -

சத்தியமேவ ஜெயதே''

என்பது இதுதானோ

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn