பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தலுக்கான விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தலுக்கான விருது

திருச்சி, அக்.9 மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள  Amarkantakஇந்திரா காந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறை சார்பில் (Indira Gandhi National Tribal University) தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் 23.09.2021 இணைய வழியில் நடைபெற்றது

இக்கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்க வியல் துறை பேராசிரியர் ஆர். இராஜகோபாலன் அவர்கள் கலந்து கொண்டு “ Evaluation of Synergistic Anti-Cancer Activity of Combined Gallic Acid-Stearylamine Conjugate and 5- Fluorouracil in A431 Human Squamous Carcinoma Cell Line” என்ற தலைப்பிலான வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டுரையினை சமர்ப்பித்தார்.

புற்றுநோய்க்கு எதிரான மருந்தியல் ஆய்வினை சிறப் பாக எடுத்துரைத்தமைக்கு இப்பல்கலைக்கழகம் அவருக்கு சிறந்த வாய்மொழி ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்தலுக்கான விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.    

விருது பெற்ற பேராசிரியர் ஆர். இராஜகோபாலன் அவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment