புதுடில்லி, அக்.25 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு ஆதாரங்களை மறைத்து தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுப்பதில், துணைக்குழு வும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து செயல்பட வேண் டும் என கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக் குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்கமுறைகள் சரியாக இல்லை என்றும் ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி உத்தர விட்டது.
இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. பராமரிப்பு பணிகளும் முடிந்து விட்டது. எனவே, அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற பேச் சுக்கே இடமில்லை, என ஒன்றிய அரசு கடந்த 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், மனுதாரர் ஜோய் ஜோசப் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அரசின் அறிக்கை, தொழில் நுட்ப ரீதியாக தவறாக உள்ளது. ஏனெனில், உலகில் உள்ள 6 அணைகள் கட்டமைப்பு ரீதியாக பலவீனமாகவும், இயற்கை சீற்றத்தாலும் செயலிழக்கும் அபா யத்தில் இருக்கிறது என அய்நா.வின் நீர், சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கான ஆராய்ச்சி பல்கலைகழகத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதில் முல்லைப் பெரியாறு அணையும் ஒன்றா கும். இந்த பட்டியலில் இருக்கும் 4அணைகளின் செயல்பாடு ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது, ஜிம்பாப்பேவில் உள்ள அணையும், முல்லைப் பெரியாறும் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இந்த அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். இதை ஒன்றிய அரசு தனது அறிக்கையில் மறைத்து விட் டதால் அதனை நிராகரிக்க வேண்டும்.
இந்த அறிக்கைக்கு பதிலளிக்க நான்கு வாரம் எங்களுக்கு அவகாசம் வேண்டும், என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment