பொழுது விடிந்தால் போச்சு...
* விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று பா.ஜ.க. கூறியதே, என்னாச்சு?
- அகிலேஷ் யாதவ், உ.பி. மேனாள் முதலமைச்சர்
>> ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் என்னாச்சு என்றுகூட கேட்பார்கள் போலிருக்கிறதே!.
தேர்தல் ஜூரம்தான்
* உத்தரப்பிரதேசத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகள்.
>> எல்லாம் தேர்தல் படுத்தும்பாடுதான்!
மனிதனை நினை!
* கடவுள் சிலைகளைப் பாதுகாக்க தனி அறைகள் கட்டப்பட்டுள்ளதா?
- உயர்நீதிமன்றம் கேள்வி
>> ஆக, கடவுள் தன்னைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாதவர், அப்படித்தானே!
No comments:
Post a Comment