பெங்களூரு, அக்.26- கருநாடகாவில் விஜயபுரா அருகே முஸ்லிம் பெண்ணை காதலித்த ஹிந்து இளைஞர் ஆணவக் கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருநாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா அருகேயுள்ள பெக்கனூருவைச் சேர்ந்தவர் ரவி நிம்பரகி (32). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர் களின் காதலுக்கு பெண்ணின் குடும் பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு கடந்த செப்டம்பரில் திருமண ஏற்பாடுகள் நடந்த போது, ரவி தனது பெற்றோருடன் சென்று பெண்ணின் குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்ப தால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என பெண்ணின் பெற் றோர் மறுத்துள்ளனர். மேலும், காதலை கைவிடுமாறும் மிரட்டிய தாக தெரிகிறது. ஆனாலும் அவர்களின் காதல் தொடர்ந்தது.
இந்த சூழலில், கடந்த 21ஆம் தேதி, பெண்ணின் உறவினர் அஹமது ஃபாரிக் என்பவர் ரவியை அலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்துள்ளார். பின்னர், அவரை தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பெண், விஜயபுரா காவல் உதவி மய்யத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத் துக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதியன்று ரவி ஊருக்கு ஒதுக்கு புறமான கிணற்றில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். முதல்கட்ட விசார ணையில் ரவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்.டி. ஆனந்த்குமார் கூறும்போது, “ரவி வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் சகோதரர், தாய் மாமா மற்றும் உறவினர்கள் 5 பேர் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, கிணற்றில் உடலை வீசியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப் படையில் அவரது சகோதரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்'' என்றார்.
இதே மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முஸ்லிம் பெண்ணை காதலித்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளைஞரும், அந்தப் பெண்ணும் பெண்ணின் குடும்பத்தினரால் எரித்து கொலை செய்யப்பட்டனர். கடந்த வாரத்தில் பெலகாவியில் ஹிந்து பெண்ணை காதலித்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment