உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 23, 2021

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை, அக்.23 புதுக்கோட்டை மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நேற்று (அக். 22) வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 18.10.2021 அன்று  விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர் என்றும், அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தெரியவந்ததையடுத்து, அவர் களை மீட்டுத் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியி ருந்தார்.

மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் (வயது 22), சேவியர் (வயது 38) ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில், மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (வயது 28) என்பவர் இறந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வரப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் என்பவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்”.

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment