சிதம்பரம், செப்.21 சிதம்பரம் மாவட்டம், குமாரகுடியில் மாவட்ட கழக துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் - பொதுக்குழு உறுப்பினர் சுமதி பெரியார்தாசன் ஆகியோர் மகன் சு.பெ.தமிழமுதன் - மாலதி இணையேற்பு வரவேற்பு 11.9.2021 அன்று கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பேரா. பூசி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் துரை. கி.சரவணன், பேராசிரியர்கள் முருகு பாண்டியன், பா.செல்வராசு, வடலூர் நகர தலைவர் புலவர் இராவணன், கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் பூ.அரங்கநாதன், மண்டல செயலாளர் நா.தாமோதரன், விருதை மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி, ஒன்றிய தலைவர் இரா.செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், ஆனந்தபாரதி, காட்டுமன்னை நகர தலைவர் பொன்.பஞ்சநாதன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் பாவேந்தர்விரும்பி, மாவட்ட ப.க. தலைவர் பூ.வே.அசோக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி சிலம்பரசன், இளைஞரணி செயலாளர் அ.சுரேஷ், புவனகிரிராமதாஸ், கொழை இராசசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment