சீனாவில் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

சீனாவில் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட கட்டுமான நிறுவனங்கள்

மும்பை, செப். 21- தொழில் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியல் தயாரிப்பில், சீனா முறைகேடுகள் செய் திருப்பதாக, உலக வங்கி கடந்த வாரம் அறிவித் தது. சீனாவுக்கு இப்போது அடுத்த அடியாக, அந் நாட்டின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமானஎவர்கிராண்டுதிவால் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளது. கிட்டத்தட்ட 22 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது இந்நிறுவனம்.இதை யடுத்து, ஹாங்காங் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 87 சதவீத சரிவைக் கண்டது. இதன் பாதிப்பு இந்திய சந்தை களிலும் பிரதிபலித்தது. ஒரு நிமிடத்துக்கு 1,000 கோடி ரூபாய் என இழப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment