பொன்னேரி நகர மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகம்
பொன்னேரி, செப்.14 பொன்னேரி நகர மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 05.09.21 அன்று மாலை 5 மணியளவில் பொன்னேரி கலைஞர் அரங்கில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
நகர தலைவர் வே.அருள் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
தீர்மானம்- 1) விடுதலை, பெரியார் பிஞ்சு, உண்மை சந்தாக்களை சேர்ப்பது
2) தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரிகப்பட்டி பெரியார் சமத்துவபுரத்தில்
பெரியார் வளைவு, பெரியார் சிலை அமைக்கக் கோரிக்கை
தருமபுரி,செப்.14- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் செல்லியம்பட்டி ஊராட்சி கரிகப்பட்டியில் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் அதிமுக ஆட்சியின் அவலத்தால் பெரியார் சமத்துவபுரம் என்னும் பெயர் வளைவு மற்றும் பெரியார் சிலை கூட இல்லாமல் இருக்கும் நிலையில் உள்ளது.
எனவே பெயர் வளைவு மற்றும் பெரியார் சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment