மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே துரிதமாக தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 15, 2021

மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே துரிதமாக தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை, செப். 15-  மாவட்ட அளவிலேயே மக்களு டைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். மக்கள் இதயங்களை குளிர்விப்ப தும் அரசுப்பணியின் ஓர் அம்சமே என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு கைப்பட கடி தம் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கைப்பட கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட ஆட்சியர் என்ற மகத்தான பொறுப் பில் இருக்கும் இளம் தோழர்களே! இன்று முத லமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்என்பது சிறப்புத்திட்டம். போர்க் கால அடிப்படையில் அலு வலர்கள் அந்த மனுக் களை அணுகியதால் அத் தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது.

அதேபோன்று அனைத்து நேர்வுகளில் நாம் செயல்படுவது சாத் தியமில்லை. ஒரே நாளில் பத்தாயிரம் மனுக்கள் வந்து குவிகின்றன. முத் துக்குளிக்க மூச்சுப்பிடித் தவன் அதைப்போலவே எல்லா நேரங்களிலும் செயல்பட இயலாது. இந்த மனுக்கள் ஏன் வந்து இங்கு குவிகின்றன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மாவட்டம், வட்டம், சிற்றூர் அளவி லேயே தீர்க்கப்பட வேண் டிய பிரச்சினைகள், உரிய காலத்தில் தீர்க்கப்படா மலிருப்பதால் பொறுத் துப் பொறுத்துப் பார்த்து விட்டு அவர்கள் குக்கிரா மங்களில் இருந்து கோட் டையை நோக்கி புறப் பட்டு விடுகிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் மக்களுடைய பிரச்சினை களை மாவட்ட அளவி லேயே துரிதமாக தீர்ப்ப தற்கு முனைய வேண்டும். முனைப்பாக இந்நேர்வில் கனிவோடும், பணிவோ டும் செயல்பட்டால் அவர் கள் தலைமை செயலகத் தின் கதவுகளை தட்ட வேண்டிய தேவை எழாது.

இலக்குகளை அடை வது மட்டுமல்ல, மக்கள் இதயங்களை குளிர்விப் பதும் அரசுப்பணியின் ஓர் அம்சமே

அதிக மனுக்களை தீர்த்து வைக்கிற மாவட்ட ஆட்சியருக்கு கேடயங் கள் வழங்குவதைவிட குறைவான மனுக்களை தலைமை செயலகம் எந்த மாவட்டத்தில் இருந்து பெறுகிறதோ, அந்த மாவட்டத்துக்கு அளிக்கிற நடைமுறையை கொண்டுவருமளவு உயர, உயரப் பறக்கும் பறவை யைப் போல் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வெற்றி பெறுவோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment