பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: செப்.17 முதல் பெறலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 15, 2021

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: செப்.17 முதல் பெறலாம்

சென்னை, செப்.15 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17 முதல் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘’2019- 2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 17.09.2021 அன்று முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள, பள் ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளியில் தேர்வர் கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினைக் கண்டிப் பாகப் பின்பற்றுதல் வேண்டும்‘’. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நவம்பர் மாதம் 4 நாள் சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை, செப்.15 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது உள்ளிட்டவற்றுக்காக வரும் நவம்பர் மாதம் 4 நாள்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிக ளுக்கும் (ஆட்சியர்கள்) அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை வாக்கா ளராக தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14ஆம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), 27 மற்றும் 28ஆம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) என 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

எனவே இந்த நாள்களில் முகாம்கள் நடத்தப்படுவது குறித்து அவரவர் மாவட்டங்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், இடமாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் போதுமான அளவில் வைக்கப்பட வேண்டும்.

சிறப்பு முகாம் நடக்கும் அந்த 4 நாள்களிலும் வாக்குச் சாவடி அளவிலான அதிகாரிகள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சிறப்பு முகாம்களுக்கான பணிகளை செய்யும் போதும், சிறப்பு முகாம்கள் நடக்கும்போதும் கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment