உலகில்
உண்டெனில்,
அவர் பெரியார்
ஒருவர்தான் பெரியார்!
இவர்
உண்மையை
தனது
பகுத்தறிவு
ஆயுதம் கொண்டு
தோண்டினார்!
சனாதன
சாஸ்திர தடைகளை
துணிவுடன்
தாண்டினார்!
மத
மடமையில்
மூழ்கி, ,அறிவிழந்த
மக்களை சிந்திக்க
தூண்டினார்!
மானுட
சமூகத்தை
மானத்தோடும்,
சுயமரியாதையோடும்,
பகுத்தறிவோடும்
வாழ வேண்டினார்!
படமெடுத்தாடும்
பார்ப்பனிய
மனுதரும
சாஸ்திர பாம்பினை,
தனது
பகுத்தறிவு
தடி கொண்டு,
ஓங்கித் தாக்கினார்!
வர்ண பேதம்,
ஜாதிபேதம்
பேசும்
வருணாசிரமத்தை
உடைத்து
தூள் தூளாக்கினார்!
மக்களை
மானமும் அறிவும்
உடைய மக்களாக
ஆக்கினார் !
ஆம் !
உலகில் பெரியார்
ஒருவர்தான் பெரியார்!!
பொறியாளர் சிற்பி சேகர்
பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment