முத்தமிழ்ப் பேரறிஞர் தந்தை பெரியார் - அய்யா!
முழுவாழ்வு *சமூகநீதி” மனிதநேய போராளியே! - உமது
நூற்றிநாற்பத்து மூன்றின் பிறந்த நாளில்,
நுழைந்திடும் ஆண்டிதுதான் சமூகநீதி - வெற்றியாண்டு.
பத்துவயதில் பகுத்தறிவு படைப்பாளி - ஆசிரியர் அய்யா
பார்போற்றும் கி.வீரமணி பேருழைப்பும், சிந்தனையும்,
முத்துப்பல் புன்னைகையின் முகமலர் கருத்துரையும்,
முத்தமிழர் நாடாள்வோர் உலகோர் மகிழ்ந்தேற்பார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வரவர்,
முத்தான நூறுநாள் ஆட்சி சிறப்பாய்,
அத்தனை ஜாதியோர் பெண்ணுமே கோவிலில்
அர்ச்சகராக்கித் தமிழில் அர்ச்சனை உலக சாதனையே.
புத்தியை மயக்கி பித்தராக்கிய பார்ப்பன-கும்பல்
புவியிதில் பேரழிவு சக்திகளே!
சூத்திரனாய் தீண்டா அடிமைநிலை ஒழித்த - பார்ப்பன,
சுயநலசூழ்ச்சியை வென்ற பொன்னாடே சமூகநீதி வெற்றியாண்டு.
மூத்தவன் திராவிட தமிழனே அறிவால் அவனை
முந்திவிட இன்றுவரை எவருமே பிறந்திடவில்லை
எத்தனைதான் அறிவிலார் படைப்பு இருந்தென்ன?
எல்லோருக்கும் சுகவாழ்வு சுதந்திரம் தந்தது பெரியாரியலே!
- அமிர்தம்
உடற்கல்வி இயக்குநர் (ஓய்வு), வாழப்பாடி
No comments:
Post a Comment