கருநாடகா, செப். 27- கருநாடக மாநில திராவிட முன் னேற்றக் கழகம் சார்பில் இராமசந்திரபுரம் சாய் பாபா நகர் திருமண மண் டபத்தில் நடைபெற்ற முப் பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெரியார் விருது, அண்ணா விருது, கலை ஞர் விருது, பேராசிரியர் விருது, முரசொலி மாறன் விருது, தி.மு.கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருது போன்ற விருதுகளை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்ட மன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் வழங்கினார்.
இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விருது பெற்ற வர்களை வாழ்த்திப் பேசி னார். இந்த விழாவில் கருநாடக மாநில திரா விடர்கழக தலைவர் மு. ஜானகிராமன், துணைத் தலைவர் வீ.மு.வேலு, பொருளாளர் ஜெய கிருஷ்ணன், வழக்குரை ஞர் குணவேந்தன் ஆகி யோர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்க ளுக்கும், ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய் தனர். திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் கருநாடக மாநிலத்தை சேர்ந்த தி.மு.க.முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment