கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயம்

 அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஆக.2 வரும் 5-ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி. பி.சி.ஆர். சோதனை கட் டாயம் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிச மாக உயர்ந்து வருகின்றது. மேலும் ஜிகா வைரஸ் தொற்று பரவும் அங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கேரளாவில் வைரஸ் தொற்று மீண்டும் வேக மாக பரவிவரும் சூழ் நிலையில் தமிழ்நாடு எல் லைப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலை யத்தில் பயணிகளுக்கு மேற் கொள்ளப்பட்டு வரும் பரி சோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய் தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:-

வெளிநாட்டில் இருந்து வரும் பயணி களுக்கு விமான நிலையத் தில், தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் ஆர்டிஆர் பரி சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. விமான நிலையத்தில் 13 நிமிடத் தில் கரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாக உள்ளது.

மக்கள் நலனுக்காகவே அதிக கூட்டம் கூடும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பயணி களுக்கு, வரும் 5-ஆம் தேதி முதல் ஆர்.டி.பி. சி.ஆர் சோதனை கட்டா யப்படுத்தப்படும். இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினாலும் தமிழகத் திற்குள் வரலாம். இவ் வாறு அமைச்சர் மா.சுப் பிரமணியன் கூறினார்.

No comments:

Post a Comment