அப்பியம்பேட்டை கலந்துரையாடலில் இளம் தோழர்கள் பெருமளவில் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

அப்பியம்பேட்டை கலந்துரையாடலில் இளம் தோழர்கள் பெருமளவில் பங்கேற்பு

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அப்பியம்பேட்டையில் திராவிடர் கழக இளம் தோழர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் 1.8.2021 அன்று நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் உதய சங்கர் தலைமை வகித்தார். இன்றைய செயலாளர் செந்தில்வேல், கிளைக் கழக தலைவர் தனசேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, இடிமுழக்கம் இந்திரஜித், மகளிர் அணி பொறுப்பாளர்கள் சத்தியா குணசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் இளைஞர்களின் எதிர்காலம் குறித்தும் படிப்பு குறித்தும் பெரியார் கொள்கைகள் குறித்தும் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் பற்றியும் பேசினார். வழக்குரைஞர் வான்மதி, வெண்மணி, அன்புக்கனி, அறிவுச்செல்வன், கே.என் கலைச்செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

No comments:

Post a Comment