மேகதாது அணை பிரச்சினை: அனைத்து சட்டமன்றக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

மேகதாது அணை பிரச்சினை: அனைத்து சட்டமன்றக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.7.2021) தலைமைச் செயலகத்தில், மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,  நீர்வளத் துறை அமைச்சர்   துரைமுருகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்   ஆர்.எஸ். பாரதி மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்   டி. ஜெயக்குமார் மற்றும்  பி.எச். மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சியின் சார்பில்  கே.எஸ். அழகிரி  மற்றும் கு. செல்வபெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்   ஜி.கே. மணி மற்றும்  எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சின்னப்பா,  பூமிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்   தொல். திருமாவளவன்  மற்றும் ரவிகுமார், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்   நயினார் நாகேந்திரன்  வி.பி. துரைசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்   இரா. முத்தரசன் மற்றும்  நா. பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்   கே. பாலகிருஷ்ணன்  பி. சண்முகம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா  . அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில்   பி. வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில்  .ஆர். ஈஸ்வரன் மற்றும்  எஸ். சூரியமூர்த்தி, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில்  பூவை ஜெகன்மூர்த்தி மற்றும்  .குட்டி, தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment