அரசியலில் ஈடுபடமாட்டேன்.. மக்கள் மன்றமும் கலைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

அரசியலில் ஈடுபடமாட்டேன்.. மக்கள் மன்றமும் கலைப்பு

  ரஜினிகாந்த் அறிக்கை

சென்னை ஜூலை 12 அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மருத் துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றி ருந்தார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த 9.7.2021 அன்று   சென்னை வந்தார். இந்த நிலையில் அவர் இன்று (12.7.2021) மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்த சந்திப்பு நிகழ்ச்சி கோடம் பாக்கத்தில் உள்ள ராக வேந்திரா திருமண மண் டபத்தில் நடைபெற்றது.

ராகவேந்திரா மண்டபத் திற்கு வந்த ரஜினி செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியலுக்கு வரு வதா வேண்டாமா என்பது குறித்தும் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கவுள்ளதாக செய்தி யாளர்களிடம் தெரிவித்திருந் தார்.  ஆலோசனைக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் களுக்கும் என்னை வாழ வைத்த   ரசிகப் பெரு மக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள் விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

 நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன் றமாக மாற்றி மாநில அள விலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கி னோம். காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்பட வில்லை.   வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை.

 ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செய லாளர்கள், இணை, துணை செய லாளர்கள் மற்றும் செயற் குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment