ஈரோடு, ஜூலை 27 தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மண்டலம் முழுவதும் சுவரெழுத்து பிரச்சாரம் மேற்கொள்வதென்று ஈரோடு மண்டல கழக கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஈரோடு மண்டலம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் சுவரெழுத்து பிரச்சாரப் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று (26.07.2021) இரவு ஈரோடு மாநகரில் சுவ ரெழுத்து பிரச்சாரம் கழக மகளிரணி பொறுப்பாளர்களின் வேண்டு கோளுக்கிணங்க ஈரோடு மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, இளை ஞரணி, மாணவர் கழகம், பகுத்தறி வாளர் கழகம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு, பெரியவலசு அண்ணா திரை யரங்கு முன்பு, ஈரோடு - சக்தி சாலையில் மகேஷ்வரி மஹால் முன்பு உள்ள சுவர்களில் சுவரெழுத்து விளம்ப ரங்கள் பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, ஈ ரோடு கழக மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை ஆகியோர் எழுதினர். இப்பணியை பாராட்டி மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட தலைவர் கு.சிற்றரசு ஆகியோர் மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழக பொறுப் பாளர்களை தொடர்பு கொண்டு கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கழக தோழர்களை பாராட்டி ஊக்கப் படுத்தினர்.
No comments:
Post a Comment