கீழடி அகழாய்வில் வெளிவந்த சுடுமண் உறைகிணறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

கீழடி அகழாய்வில் வெளிவந்த சுடுமண் உறைகிணறு

சிவகங்கை, ஜூலை 12 கீழடியில் நடந்துவரும் 7ஆம் கட்ட அகழ் வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறை கிணறு வெளிவந்துள் ளது. அதில் உள்ள நுட்பமான வடிவமைப்பை கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழ டியில் மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகு திகளிலும் குழிகள் தோண்டப் பட்டு அகழாய்வு பணிகள் மும் முரமாக நடந்து வருகின்றன. மண்ணுக்குள் புதைந்திருந்த பாசிமணிகள், சிறிய, பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம் உள்பட ஏராளமான பழங்கால பொருட் கள் எடுக்கப்பட் டுள்ளன.

இந்த நிலையில் கீழடியில் அகழாய்வில், அழகிய வேலைப் பாடுடன் கூடிய சுடுமண்ணால் ஆன உறை கிணறு தற்போது வெளிப்பட்டுள்ளது.

இந்த உறை கிணறு 3 அடுக் குகளை கொண்டதாக உள்ளது. இரும்பு சங்கிலி போன்ற நுட்ப மான வடிவமைப்பு அதில் உள்ளது.

இந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு வந்து ஆர்வத்துடன் பார்வையிட் டனர்.

பண்டைய காலத்திலேயே கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்ப தற்கு இது போன்ற உறை கிணறுகள் முக்கிய ஆதாரமாக கிடைத்து வருகின்றன. ஆனால், 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட் டது இதுவே முதல் முறை.

கடந்த ஆண்டு நடந்த 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறை கிணறு கண்டுபிடிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment