வணிகவரி, பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

வணிகவரி, பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும்

முதலமைச்சர்மு..ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 24 வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொது மக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண் டும் என்று அரசு அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு..ஸ்டா லின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் கலந்து கொண்ட அதி காரிகளிடம் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் பேசியதாவது:-

வணிகவரி மற்றும் பதிவுத் துறை வரி வருவாய் இலக்கை முழுவதும் எய்திட முனைப் புடன் செயல்பட வேண்டும். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. வரி இழப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசிடமிருந்து விரை வாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வரி வசூல்

வணிகவரி மற்றும் பதிவுத் துறை குறித்த புகார்களைத் தெரிவிப்பதற்காக அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலமாக பெறப்படும் வணி கர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள், எவ்வித தொய்வு மின்றி தீர்வு காணப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்த வரி வருவாய் அத்தியாவசிய மானது. எனவே வரி ஏய்ப்பு நடவடிக்கையை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்கு செலுத் தப்பட வேண்டிய வரியை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப்படைத்தன்மை

வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். வணிகர் நல வாரியத்தில் வணி கர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்கு துறை அலுவலர்கள் முனைப் புடன் செயல்பட வேண்டும். பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத் திலும் உள்ள ஆவண தொகுதி களைக் கணினியில் பதிவுசெய்து, அப்பணிகள் முடிவடைந்த பின்பு பொதுமக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களைப் பெறுவதற்கு வழிவகை செய் யப்பட வேண்டும்.

எனவே பட்டா மாறுதல் செய்யும்போது தொடர்புடைய ஆவணங்களை வருவாய்த் துறையினர் இணைய வழியாக பார்வையிட முடியும். பத்திரப் பதிவு அலுவலகங்களின் சேவை, மக்களுக்கு ஏற்ற வகையில் எளிதானதாகவும், வெளிப்படைத்த ன்மையுடனும் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் மூலமாக மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .கிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் மு..சித்திக், பதிவுத் துறை தலைவர் ..சிவன் அருள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment