கிருட்டினகிரி, ஜூலை24- தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க கிருட்டினகிரி மாவட்டத்தில் 21-7-2021 புதன்கிழமை, மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், கிருட்டினகிரி நகர தலைவர் கோ.தங்கராசன் ஆகியோர் மேற்கொண்ட பெரியார் பிஞ்சு சந்தா சேர்ப்பு சுற்றுப் பயணத்தில் ஊற்றங்கரையில் மண்டல செயலாளர் பழ.பிரபு குடும்பத்தின் சார்பில் ஆயுள் சந்தாவை கியூபாபிரபு மாவட்ட தலைவர் த.அறிவரசனிடம் வழங்கினார்.
ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் க.பொன்முடி, செயலாளர் செ.சிவராஜ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் வித்யா பிரபு, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இரா.நிலவன், பகுத்தறிவாளர் கழக தோழர் சித.வீரமணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய கழகத்தின் சார்பில் மொத்தம் 74 சந்தாக்கள் வழங்கினர்
பெரியார் பிஞ்சு 50 சந்தாக்களை மாவட்ட தலைவர் த.அறிவரசன் அவர்களிடம் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், செயலாளர், மாவட்ட தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசிப்பு வட்டத் தலைவர் இரா.பழனி, கிருட்டினகிரி நகர தலைவர் கோ.தங்கராசன், மாவட்ட துணைத் தலைவர் அரங்க.ரவி, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இரா.நிலவன் மற்றும் தோழர்கள் உள்ளனர். மத்தூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் மொத்தம் 100 சந்தாக்கள் வழங்கினர்.
பர்கூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய தலைவர் கா.ஞானசேகரன், செயலாளர் ப.பிரதாப், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து மாவட்ட தலைவர் த.அறிவரசன் அவர்களிடம் 52 பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்கினர்.
ஊற்றங்கரை ஒன்றியம் 74 சந்தா
மத்தூர் ஒன்றியம் 100 சந்தா
பர்கூர் ஒன்றியம் 52 சந்தா
மொத்தம் 226 சந்தாக்கள். ஒருநாளில் சேர்க்கப்பட்டது. மேற் கொண்டு இன்னும் அதிகப்படியான சந்தாக்களை சேர்த்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
மேலும், காவேரிப்பட்டணம், கிருட்டினகிரி ஆகிய ஒன்றியங்களில் பெரியார் பிஞ்சு சந்தா சேர்ப்பு பணிகளை தொடர்ந்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment