சென்னை, ஜூலை 24 மராட்டி யத்தில் இருந்து 3.12 லட்சம் கோவி ஷீல்டு கரோனா தடுப்பூசிகள் சென் னைக்கு வந்தடைந்துள்ளன.
நாட்டில் கரோனா 2ஆவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற் பட்டன. இதனை தொடர்ந்து கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா 3ஆவது அலையில் இருந்து தற் காத்து கொள்ள 2 டோஸ் தடுப்பூசி களும் போட்டுக்கொள்வது அவ சியம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ், தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மராட் டியத்தின் புனேவில் உள்ள மருத்துவ கிடங்கிலிருந்து ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. அந்த தடுப்பூசிகள் அடங்கிய 26 பார்சல்கள் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், புனேவி லிருந்து சென்னை விமான நிலையம் வந்தது.
இதனையடுத்து உடனடி யாக சென்னை விமான நிலைய அதி காரிகள் தடுப்பூசி பார்சல்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இதனால் தடுப்பூசி போடும் ஆவலில் உள்ள பொதுமக்களின் தேவையானது பூர்த்தி செய்யப்பட உள்ளது.
No comments:
Post a Comment