பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தால் முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து ஆரம்பியுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தால் முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து ஆரம்பியுங்கள்

அய்.சி.எம்.ஆர்தலைவர் பேட்டி

புதுடில்லி,ஜூலை24 இந்தியா வில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிப்பது புத்திசாலித் தனமான முடிவாக இருக்கும் என்று அய்சிஎம்ஆர்  தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித் துள்ளார்.

கரோனா வைரஸ் காரண மாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலை யில் உள்ளன. கோவிட் தொற்றுப் பாதிப்பு குறைந்து வரும் நிலை யில், பொதுத் தேர்வுகளை எதிர் கொள்ளும் மேல்நிலை வகுப்பு களுக்குப் பள்ளிகளைத் தொடங் கலாமா என்று ஒன்றிய மாநில அரசுகள் யோசித்து வருகின்றன. மருத்துவக் கல்லூரிகள் உள் ளிட்ட கல்லூரிகளும் படிப்படி யாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பதென்றால், தொடக்கப் பள்ளியில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும் என்று அய்சிஎம்ஆர்  தலைவர் பல்ராம் பார்கவா கருத்து தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து டில்லியில் செய் தியாளர்களிடம் அவர் கூறிய தாவது, ''தொற்றுப் பரவலைக் கையாளுவதில் இளைஞர்களை விடக் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள். மனித செல்களில் கோவிட்-19 வைரஸ் பரவலை அதிகப்படுத்தும், ஏசிஇ (ஆஞ்சியோடென்சினாக மாற்றும் என்ஸைம்கள்) ஏற் பிகள், பெரியவர்களைக் காட் டிலும் குழந்தைகளிடம் குறை வாகவே உள்ளன

சில நாடுகளில், குறிப்பாக ஸ்கேண்டிநேவிய (டென்மார்க், ஸ்வீடன், நார்வே போன்ற வடக்கு அய்ரோப்பிய நாடுகள்) நாடுகளில் முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் அலைகளில், அவர்கள் தொடக்கப் பள்ளி களை மூடவே இல்லை. எத்தகைய கரோனா அலைகளை அந்த நாடுகள் எதிர்கொண்டபோதி லும் அவர்களின் ஆரம்பப் பள் ளிகள் மட்டும் திறந்தேதான் இருந்தன.

அதனால் இந்தியாவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து பணிகளை ஆரம்பித்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

அதே நேரத்தில், தொடக்கப் பள்ளி மாணவர்களைக் கையா ளும் ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவி யாளர்கள் உள்ளிட்ட ஆசிரியரல் லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டி ருப்பதை உறுதி செய்யவேண்டும்'' என்று அய்சிஎம்ஆர்  தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

No comments:

Post a Comment