அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
கிருஷ்ணகிரி, ஜூலை 24 தொழில் நுட்ப பூங்காவை முழு பயன் பாட்டிற்கு கொண்டு வர நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் தகவல் தொழில் நுட்ப பூங்காவை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று (23.7.2021) ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல திட்டங்கள் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை அதை அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் நிறைய முதலீட்டாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்கள் குறிப்பாக கர்நாடகம், தெலங்கானா, ஆந் திரம் போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். மீண்டும் அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை தேர்வு செய்யும் அளவுக்கு அதற் கான ஏற்பாடுகளை செய்வதற்கு நிச்சயம் முயற்சி செய்வோம்.
கடந்த 10 ஆண்டுகளாக முன் னேற்றம் அடையாத தகவல் தொழில் நுட்ப பூங்காவை முழு பயன்பாட் டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏராளமான இளைஞர்கள் பணி செய்வதற்கு தயாராக உள் ளனர். அதற்குரிய அறிவும் திறனும் அவர்களுக்கு இருக்கிறது. அதை ஊக்கப்படுத்த அதற்கு தேவையான முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment